Sunday, September 9, 2007

முல்லைத் திணை

முல்லை-காடும் காடு சார்ந்த இடமும்.

பெரும் பொழுது-கார் காலம்(ஆவணி, புரட்டாசி)

சிறு பொழுது-மாலை(6 மணியிருந்து10 வரை)

கருப்பொருள்;
தெய்வம்-முருகன்
உயர்ந்தோர்-குறுபொறை நாடன்,தோன்றல்,மனைவி
தாழ்ந்தோர்-இடையர்,இடைச்சியர்,ஆயர்,ஆய்ச்சியர்
பறவை-காட்டுக் கோழி
விலங்கு-மான், முயல்
ஊர்-பாடி
நீர்-சுனை
பூ-முல்லை,தோன்றி,பிடவம்,கொன்றை
மரம்-கொன்றை,காயா,குருந்தம்
உணவு-வரகு,சாமை,முதிரை
பறை-ஏறுகோட்பறை
யாழ்-முல்லை யாழ்
பண்-சாதாரிப்பண்
தொழில்-வரகு,சாமை விளைத்தல்,களை கட்டல்,ஆநிரை மேய்தல்,ஏறு தழுவுதல்.

உரிப்பொருள்-இருத்தலும்,இருத்தல் நிமித்தமும்.

இதோ கலியில் நல்லாந்துவனாரின் முல்லைப் பாடல்;
பெற்றோர் அறியாமல் கூடி மகிழ்ந்த ஒருத்தி எதிர்பாராமல் அகப்பட்டுக் கொள்கிறாள்.யாரும் எதுவும் பேசவில்லை என்றாலும் நாணம் மீதூர காட்டில் சென்று ஒளிந்தாள்.திருமணம் உறுதியாற்று என்று தோழி கூறி அழைத்து வருகிறாள்.

தோழி!நாம் காணாமை உண்ட கடுங்கள்ளை,மெய்கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக்,
கரந்ததூஉம் கையொ கோட்பட்டாம் -நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தோர்
முல்லை ஒரு கண்ணியும்,மெல்லுயால்!
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன;தோழி
................ ...............
..........................
........ .............. .........என்
சாந்துளர் கூழை நிலம் தாழ்ந்த
பூங்கரை நீலம் தழீஇத் தளர்பு ஒல்கிப்,
பாங்கரும் கானத்து ஒளித்தேன்...
. ......... ................. .....
.......... ................
அவன் கண் அடைசூழ்ந்தார் நின்னை;அகன்கண்
வரைப்பில் மணல்தாழப பெய்து,திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப;

அவன் தொடுத்து தந்த முல்லைமலரினை ஆவலுடன் தலையில் வைத்துக் கொண்டாள்.செவிலித்தாய் தலை வார பிரித்த பொழுது அப்பூ விழுந்து காட்டிக் கொடுத்தத்து .நீல வண்ண ஆடை தளர்ந்து விழ நாணத்தால் காட்டில் ஒளிந்துக் கொண்டாள்.
தோழி அவளிடம் சென்று அவனுக்கே உன்னை திருமணம் செய்ய முற்ற்த்தில் மணல் பரப்பி அணி செய்கின்றனர் வா என்று அழைத்துச் செல்கிறாள்.

முல்லைத் திணைக்குரிய கருப்பொருளை உணர்ந்து படித்தால் இனிய சுவை விளங்கும்.

No comments: